திருமலை நாயக்கர் அரண்மனை
திருமலை நாயக்கர் அரண்மனை (Thirumalai Nayak Palace) அல்லது திருமலை நாயக்கர் மஹால் என அழைக்கப்படும் அரண்மனை, மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் பொ.ஊ. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டப்பட்டது. மதுரையில் அமைந்துள்ள இக் கட்டிடம், புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து, சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில், தெற்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. இதத் தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால் இந்தோ சரசனிக் பாணி கட்டிடக் கலையில் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக்கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதி யே, தற்போது அஞ்சியுள்ளதாக கருதப்படுகிறது. பிரித்தானிய இந்தியாவின் சென்னை ஆளுநர் பிரான்சிஸ் நெப்பியர் பொ.ஊ. 1872-இல் இவ்வரண்மனையைப் புதுப்பித்தார். தமிழக அரசு தொல்லியல் துறை பராமரிக்கும் மூன்று அரண்மனைகளில், இந்த அரண்மனையும் ஒன்றாகும். இவ்வரண்மனையின் நீட்சியாக, பத்துத் தூண் பகுதி இருந்தது. திருமலை நாயக்கர் அரண்மனை : கி.பி.1623- இருந்து 1659 வரை மதுரையைத் தலைநகராக்கிக் கொண்டி சீரும் சிறப்பாக ஆண்ட திருமலைநாயக்கரால் இவ்வரண்மனை கட்டப்பட்டது. தென் இந்தியாவிலேய யேஞ்சியுள்ள பண்டைய அரண்மனைகளில்...